என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மோசமான சாலை"
- கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளது. இந்த பகுதியில் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள்.
- பல்வேறு இடங்களில் பெரிய பள்ள ங்கள் உருவாகி உள்ளது. இந்த வழியாகத்தான் பண்ருட்டியில் இருந்து வரும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் வருகின்றன.
கடலூர்:
கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளது. இந்த பகுதியில் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. அதன்படி பல்வேறு இடங்களில் தற்போது சாலைகள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இதனால் நகர் பகுதி பளிச்–சென காணப்படுகிறது. ஆனால் நத்தவெளி-சரவணாநகர் விரிவு பகுதி சாலை தற்போது போக்கு வரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இந்த பகுதியில் அரசு ஊழியர்கள், வக்கீல்கள், டாக்டர்கள், என்ஜினீயர்கள் மற்றும் நடுத்தர மக்கள் ஏராள மானோர் வசித்து வருகி றார்கள்.
வளர்ந்து வரும் நகர் பகுதியான இங்கு நாளுக்கு நாள் மக்கள் பெருக்கம் அதி கரித்து வருகிறது. ஆனால் இந்த நகரின் பிரதான சாலையாக உள்ள நத்த வெளி-சரவணாநகர் விரிவு பகுதியில் உள்ள ரோடு குண்டும், குழியுமாக காணப்படுகிறது. பல்வேறு இடங்களில் பெரிய பள்ள ங்கள் உருவாகி உள்ளது. இந்த வழியாகத்தான் பண்ரு–ட்டியில் இருந்து வரும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் வருகின்றன. இந்த வாகனங்கள் அனைத்தும் பள்ளத்தில் தடுமாறி வருகிறது. 4 சக்கர மற்றும் 2 சக்கர வாகன ஓட்டிகளும் இந்த பள்ளத்தால் கடும் அவதிக்குள்ளாகி வருகி–றார்கள். எனவே மாநக–ராட்சி அதி–காரிகள் மற்றும் மாவட்ட அதிகாரிகள் இந்த விஷ–யத்தில் தனிக்கவனம் செலுத்தி புதிய சாலை அமைக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் வலியு–றுத்தி உள்ளனர்.
- கடலூரில் மோசமான சாலைகளால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளளாகினர்.
- உரிய நடவடிக்கை எடுக்க மனு கொடுத்தும் சாலை அமைக்க எந்த நடவடிக்கையும் எடுககப்படவில்லை.
கடலூர்:
கடலூர் மாவட்டம் தொழிற்சாலை அதிகம் உள்ள பகுதியாக விளங்கி வருகிறது. குறிப்பாக கடலூர் சிப்காட் பகுதியில் அதிக தொழிற்சாலைகள் அமைய பெற்று உள்ளது. சிப்காட் அருேக கடலூர் துறைமுகம் பகுதியில் ெரயில்வே ஜங்ஷன் உள்ளது. இங்கு பல்வேறு ஐஸ் கட்டி தொழிற்சாலைகளும் உள்ளது. கடலூர் சிப்காட் வளாகத்தில் கெமிக்கல் தொழிற்சாலை, மாத்திரை தயாரிக்கும் தொழிற்சாலை, பெயிண்ட் தொழிற்சாலை, அலுமினிய பாத்திரங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளிட்ட பலவிதமான தொழிற்சாலைகள் உள்ளது.இப்படி கடலூரில் மற்றும் கடலூரை சுத்தி பலவிதமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. மேலும் இங்கு பல்வேறு ஹோட்டல்கள், சுற்றுலா தலமான சில்வர் பீச் போன்றவற்றை உள்ளடக்கியது கடலூர். இப்படி முக்கியமானதாக இருந்தாலும் அனைவரும் போக்குவரத்துக்கு பயன்படுத்தக்கூடிய சாலை கடலூரில் மிக மோசமாக உள்ளது.
இந்த சாலை கடலூரிலும், பல்வேறு தொழிலை உள்ளடக்கிய துறைமுகத்திலும் சாலை மிக மோசமாக உள்ளது. இதனால் மோட்டார் சைக்கிளில் செய்பவர்கள் மற்றும் வாகனங்களில் செல்வோர் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த மோசமான நிலையில் உள்ள சாலையால் பல்வேறு விதமான பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். மோசமான சாலையை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க மனு கொடுத்தும் சாலை அமைக்க எந்த நடவடிக்கையும் எடுககப்படவில்லை. எனவே உரிய அதிகாரிகள் இதில் தலையிட்டு சாலையை சரி செய்ய வேண்டும் என்றுபொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்